புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் : அமமுக சார்பில் அன்னதானம் வழங்கல்
Jan 20 2020 7:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 103வது பிறந்த நாளையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன.
தேனி மாவட்டம் கம்பத்தில் அமமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கழகச் செயலாளர் திரு.முத்து்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்திற்கு, கம்பம் நகர கழகச் செயலாளர் திரு. ராஜாமணி முன்னிலை வகித்தார். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மக்களுக்கு அளித்த நலத்திட்டங்களை, கூட்டத்தில் பேசிய கழக நிர்வாகிகள் நினைவுகூர்ந்தனர். எம்.ஜி.ஆரின் புரட்சி பாடல்களுடன் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் திரு. டேவிட் அண்ணாதுரை, கழக அமைப்பு செயலாளர்கள் டாக்டர் கதிர்காமு, திரு. தங்கதுரை, அம்மா பேரவை துணைச் செயலாளர் திரு. M.C.முத்தையா, தலைமைக் கழக பேச்சாளர் திரு.பொன் அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
புதுச்சேரி மாநில எல்லையில் சோரியாங்குப்பத்தை ஒட்டியுள்ள தென்பெண்ணை ஆற்றில் நடைபெறும் ஆற்று திருவிழாவின் போது, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. புதுச்சேரி மாநில கழகச் செயலாளர் வழக்கறிஞர் திரு. வேல்முருகன் தலைமையில் கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினர்.