மாண்புமிகு அம்மாவை பற்றி அவதூறு பேசியது தொடர்பான வழக்‍கு - விஜயகாந்த்துக்‍கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் : வழக்‍கை ரத்து செய்ய முடியாது என்றும் திட்டவட்டம்

Jan 20 2020 1:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

மாண்புமிகு அம்மாவைப் பற்றி அவதூறு பேசியது தொடர்பான வழக்‍கில் தே.மு.தி.க. தலைவர் திரு. விஜயகாந்துக்‍கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு தேனியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய திரு. விஜயகாந்த், அப்போதைய முதலமைச்சர் அம்மாவை விமர்சித்து பேசியதாக, தமிழக அரசு தரப்பில், தேனி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரி திரு. விஜயகாந்த் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

இதை எதிர்த்து திரு. விஜயகாந்த் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு, தலைமை நீதிபதி திரு. ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி திரு. சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது திரு. விஜயகாந்த் பேசிய பேச்சுகள் அவதூறானவையே என தெரிவித்த நீதிபதிகள், அரசியல் சூழ்நிலைகளைப் பற்றி விவாதிக்க நீதிமன்றத்தில் இடமில்லை எனக்‍ கூறினர்.

எதிர்க்கட்சிகள் எப்படி செயல்பட வேண்டும் என குடியரசு துணைத்தலைவர் ஏற்கெனவே தெரிவித்துள்ளதையும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், விஜயகாந்த் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00