தஞ்சை விமானப்படை தளத்தில் நிலைநிறுத்தப்பட்ட சுகோய்-30 ரக போர் விமானங்கள் - கிழக்‍கு கடற்கரைச் சாலையில் எதிரிகளை கண்காணிக்‍கும் பணிகளுக்‍கு பயன்படுத்தப்படும் என அறிவிப்பு

Jan 20 2020 1:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

தஞ்சையில் உருவாக்‍கப்பட்டுள்ள தரம் உயர்த்தப்பட்ட அதிநவீன விமான படைத்தளம் இன்று நாட்டிற்கு அர்ப்பணிக்‍கப்பட்டது.

தஞ்சாவூரில் புதுக்கோட்டை சாலையில் விமானப்படை தளம் 1940-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் தஞ்சாவூர் விமானப்படை தளம் செயல்பாட்டில் இருந்தது. சுதந்திரத்திற்கு பின்னர் இந்த விமானப்படை தளம் பயன்படுத்தப்படவில்லை. இந்த விமான தளத்தில் பெரிய அளவில் செயல்பாடுகள் இல்லாத நிலையில், தற்போது இந்த விமானப் படைதளம், அதிநவீன தொழில்நுட்பத்துடன் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விமானப் படைதளத்தை முப்படை தலைமைத் தளபதி திரு.பிபின் ராவத், நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார். இதனையொட்டி விமானங்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தரம் உயர்த்தப்பட்ட விமானப் படைதளத்தில், 8 சுகோய் 30ரக போர் விமானங்கள் நிறுத்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவை கிழக்கு கடற்கரை பகுதியில் பாதுகாப்பை முக்கிய பணியாக கொண்டு பங்குவகிக்‍கும் என்பது குறிப்பிடத்தக்‍கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00