திருச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளின் யோகாசன சாதனை : பார்வையாளர்கள் பிரமிப்புடன் கண்டுகளிப்பு
Jan 20 2020 10:20AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியில், பள்ளி மாணவ, மாணவிகளின் யோகாசன சாதனை நிகழ்வை, பார்வையாளர்கள் பிரமிப்புடன் கண்டுகளித்தனர்.
மதுரையைச் சேர்ந்த மகிமா மற்றும் ரேஷ்மா ஆகிய இரு மாணவிகள் ஒரு மணி நேரத்தில் ஏகபாத சிரசாசனத்தில் அமர்ந்தபடி கண்ணாடியில் ஓவியம் வரைந்தும், 2 மாணவர்கள் முட்டை மீது கோமுகாசனத்தில் 30 நிமிடம் அமர்ந்தபடியும், 2 மாணாக்கர்கள் மண்பானை மீது பர்வதாசனம், பத்த பத்மாசனத்தில் 30 நிமிடம் அமர்ந்தபடி சாதனை நிகழ்த்தினர். தொடர்ந்து 2 பேர் பத்த பத்மாசனம், பிரளயாசனத்தில் அமர்ந்தும் சாதனை நிகழ்த்தினர். இந்த சாதனை நிகழ்வானது பதஞ்சலி உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.
இதனைத்தொடர்ந்து திருச்சி தனியார் பள்ளியில் 8ம்வகுப்பு பயிலும் சுகித் சீனிவாஸ் என்ற மாணவனுக்கு, 8 தனிநபர் உலக சாதனை மற்றும் 11 குரூப் சாதனைகளை நிகழ்த்தியதற்காக உலக தமிழ் பல்கலைக்கழகம் சார்பில், பல்கலைக்கழக வேந்தர் திரு.ராய் பெர்ணான்டோ இளம் டாக்டர் என்ற பட்டம் வழங்கி கௌரவித்தார். சாதனை நிகழ்த்திய மாணவ, பலரும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.