எம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி அ.ம.மு.க. சார்பில் சென்னை அண்ணா சாலையில் வைக்கப்பட்டிருந்த கொடிகளை அகற்றுமாறு போலீசார் அராஜகம்
Jan 17 2020 8:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
எம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி, அ.ம.மு.க. சார்பில் சென்னை அண்ணா சாலையில், வைக்கப்பட்டிருந்த கொடிகளை, போலீசார் வலுகட்டாயமாக அகற்றினர்.
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு, அண்ணா சாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலைக்கு அருகே ஏராளமான அ.ம.மு.க. கொடிக் கம்பங்கள் நடப்பட்டிருந்தன. அவற்றை அப்புறப்படுத்துமாறு போலீசார் கூறியதால் அதிர்ச்சியடைந்த கழகத்தினர், ஒருதலைபட்சமாக செயல்படும் காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்தனர். எனினும், கொடிக் கம்பங்களை போலீசார் வலுக்கட்டாயமாக அகற்றினர். ஆளும் கட்சியினர் வைக்கும் கொடிக் கம்பங்களையும், பேனர்களையும் கண்டுகொள்ளாத போலீசார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் வைத்திருந்த கொடிக் கம்பங்களை மட்டும் ஒருதலைப் பட்சமாக அகற்றியுள்ளனர்.