ஈரோட்டில் களைகட்டிய காணும் பொங்கல் விழா - பெண்கள் மட்டுமே பங்கேற்று ஆடிப்பாடி விளையாடி மகிழ்ச்சி
Jan 17 2020 9:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரோட்டில் உள்ள வ.உ.சி பூங்காவில், காணும் பொங்கல் விழாவினை பெண்கள் மட்டுமே பங்கேற்று உற்சாகமாகக் கொண்டாடினர்.
ஈரோட்டில் புகழ்பெற்ற வ.உ.சி. பூங்காவில் ஆண்டுதோறும் பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு, காணும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டும் இவ்விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற பெண்கள், ஆடிப்பாடி விளையாடி மகிழ்ந்தனர். பெண்கள் அதிக அளவில் பங்கேற்றதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.