காணும் பொங்கலையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் குவிந்த பொதுமக்கள் - பாதுகாப்பு கருதி சிறப்பு ஏற்பாடுகள்
Jan 17 2020 6:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காணும் பொங்கலையொட்டி சென்னை மெரினா கடற்கரையில், காவல்துறை சார்பில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பொங்கல் பண்டிகையின் 3-ம் நாளான இன்று, காணும் பொங்கலாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் கடற்கரை, சுற்றுலாத்தலங்கள், கோயில்களுக்கு செல்வது வழக்கமாகும். இந்தநிலையில், பொதுமக்கள் சென்னை மெரினா கடற்கரையில் பாதுகாப்புடன் காணும் பொங்கலை கொண்டாடி மகிழ, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அங்கு 13 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, டிரோன் மற்றும் சிசிடிவி கேமராக்கள் மூலம், சுமார் ஐந்தாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கடற்கரையோரம் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டதோடு, கடலுக்குள் எவரேனும் இழுத்து செல்லபட்டால், அவர்களை காப்பாற்ற நன்கு பயிற்சி பெற்ற நீச்சல் வீரர்களும், பணியில் அமர்த்தபட்டுள்ளனர். தங்கள் குழந்தைகள் மற்றும் உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும்படி, தொடர்ந்து ஒலிப்பெருக்கி வாயிலாக போலீசார் பொதுமக்களுக்க அறிவுறுத்தி வருகின்றனர்.