சென்னையை அடுத்த திருவொற்றியூரில் ஒன்றரை வயது பெண் குழந்தை கொதிக்கும் நீரில் விழுந்து உயிரிழப்பு
Jan 17 2020 6:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையை அடுத்த திருவொற்றியூரில், ஒன்றரை வயது பெண் குழந்தை கொதிக்கும் நீரில் விழுந்து உயிரிழந்தது. சண்முகபுரத்தை சேர்ந்த மணிகண்டன் - ஜனனி தம்பதியரின் ஒன்றரை வயது பெண் குழந்தையான ஷிவானிஸ்ரீ, வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, சமையலறைக்குள் சென்றுள்ளார். அப்போது அங்கு தண்ணீர் கொதித்து இறக்கி வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தின் ஷிவானிஸ்ரீ விழுந்ததில் படுகாயமடைந்தார். உடனடியாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் குழந்தை ஷிவானி ஸ்ரீ சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.