புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் விழா : திருவுருவச் சிலை மற்றும் திருவுருவப் படத்திற்கு அ.ம.மு.க. சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை
Jan 17 2020 7:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
எம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி, அவரது திருவுருவச் சிலை மற்றும் திருவுருவப் படத்திற்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் சார்பில் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. 30-வது வார்டில், அலங்கரித்து வைக்கப்படிருந்த எம்.ஜி.ஆர். திருவுருவ படத்திற்கும் மாலை அணிவிக்கப்பட்டது.
தேனி மாவட்டம் போடி நகர் கழகத்தினர், நகரின் பிரதான வீதியில் ஊர்வலமாக சென்று பேருந்து நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோத்தகிரி டானிங்டனில் உள்ள எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலைக்கு அ.ம.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் திரு.எஸ்.கலைச்செல்வன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில், அ.ம.மு.க. நகர கழகம் சார்பில் நகர செயலாளர் வழக்கறிஞர் திரு. வீரக்குமார் தலைமையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 20-வது வார்டில் எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு லட்டு வழங்கப்பட்டது.
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் அண்ணா சிலையிலிருந்து ஊர்வலமாக சென்று ஒரத்தநாடு பைபாஸ் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.