மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்‍கட்டு போட்டி - மாட்டின் உரிமையாளர் மற்றும் பார்வையாளர் என இருவர் உயிரிழப்பு

Jan 17 2020 9:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்‍கட்டு போட்டியில், மாட்டின் உரிமையாளர் மற்றும் பார்வையாளர் என இருவர் உயிரிழந்தனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அலங்காநல்லூர் பகுதியில், ஜல்லிகட்டுப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் தன்னுடைய காளை மாட்டை களமிறக்‍குவதற்காக, சோழவந்தான் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் என்ற சட்டக்‍கல்லூரி மாணவர் வந்திருந்தார். போட்டியில் பங்கேற்ற பின்னர், அவரது காளையை அழைத்துச் செல்வதற்காக, காளைகளை சேகரிக்‍கும் பகுதிக்‍கு சென்றுள்ளார். அப்போது, பின்னால் வந்த மற்றொரு காளை ஸ்ரீதரை முட்டி தள்ளியதில், அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் அவர், சிகிச்சைக்‍காக அலங்காநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரீதர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஜல்லிகட்டு போட்டியை பார்வையிடுவதற்காக வந்த, மதுரை செக்கானூரணியை சேர்ந்த செல்லபாண்டி என்பவர், திடீரென மயங்கி விழுந்தார். அலங்காநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி செய்யப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி செல்லபாண்டி உயிரிழந்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00