புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் கொண்டாட்டம் : துபாயில் அ.ம.மு.க நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை
Jan 17 2020 7:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு, அரபு அமீரகம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் நிகழ்ச்சி, அ.ம.மு.க பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் வழிகாட்டுதலின்படி, அரபு அமீரகம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கொண்டாடப்பட்டது. துபாயின் Bur Dubai நகரில், அலங்கரித்து வைக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு, கழகத்தினர் மரியாதை செலுத்தி, இனிப்புகள் வழங்கி உற்சாகமாகக் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில், அமீரக கழக அமைப்பாளர் கீழக்கரை திரு.சாதிக், செயலாளர் பாவை திரு. மும்பாட்ஷா, இணைச் செயலாளர் உசிலை திரு.பா.ஆதி கிளிண்டன், இணைச் செயலாளர் திட்டக்குடி திரு.அர்ஜுனன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் திரு.ராஜகிரி சித்திக், கழக நிர்வாகிகள் எழும்பூர் திரு.மோகன், திரு.ராஜேந்திரன், திருமதி. ராணி ராஜேந்திரன், திருமதி. கலையரசி, திரு.ஜெய்சங்கர் உள்ளிட்ட கழகத்தினர் கலந்துகொண்டனர்.