வீரபாண்டிய கட்டபொம்மனின் தளபதி சுந்தரலிங்கத்தின் 243-வது பிறந்த நாள் - திருவுருவச் சிலைக்கு அ.இ.அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை
Apr 17 2014 4:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரத் தளபதியாக விளங்கிய சுந்தரலிங்கத்தின் 243-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது திருவுருவச் சிலைக்கு, அ.இ.அ.தி.மு.க. சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், கவர்ணகிரியில் பிறந்த சுந்தரலிங்கம், வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரத்தளபதியாக விளங்கியவர். பிரிட்டிஷ் படைகளை எதிர்த்து 3 போர்க்களங்களில் வென்றவர். 1799-ம் ஆண்டு, வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கிலிட்ட பிரிட்டிஷார், பின்னர் அவரது தம்பி ஊமைத்துரையையும், சுந்தரலிங்கத்தையும் சிறைபிடித்து தூக்கிலிட்டனர்.
சுந்தரலிங்கத்தின் நினைவைப் போற்றும் வகையில், அ.இ.அ.தி.மு.க. சார்பாக, அவரது திருவுருவச் சிலை, கடந்த பிப்ரவரி மாதம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கவர்ணகிரியில் நிறுவப்பட்டது. இங்கு, வீரன் சுந்தரலிங்கத்தின் 243-வது பிறந்தநாளை முன்னிட்டு, அ.இ.அ.தி.மு.க. சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் திரு. எஸ்.பி. சண்முகநாதன் மற்றும் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாக கலந்துகொண்டனர்.