உலக புலிகள் தினத்தையொட்டி தூத்துக்குடியில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் பள்ளி மாணவிகள் பங்கேற்பு
Jul 29 2014 11:18AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடியில் உலக புலிகள் தினத்தையொட்டி, பள்ளி மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
உலக புலிகள் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் புலி உருவம் கொண்ட முகமூடி அணிந்து விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர். நாட்டின் தேசிய விலங்கான புலி இனத்தை பாதுகாக்க உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர்.