தூத்துக்குடி கடலோரக் காவல் படைக்கு புதிதாக ஐ.சி.ஜி.எஸ். அபிராஜ் எனும் அதி நவீன ரோந்து கப்பல் ஒப்படைப்பு
Sep 2 2014 6:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி கடலோரக் காவல் படைக்கு புதிதாக ஐ.சி.ஜி.எஸ். அபிராஜ் எனும் அதி நவீன ரோந்து கப்பல் இன்று முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.
தூத்துக்குடி கடலோரக் காவல்படையில் சேவையாற்றி வந்த அகல்யாபாய், வீரா, நாயகி தேவி ஆகிய 3 கப்பல்களுக்கு கடந்த ஆண்டு ஓய்வு அளிக்கப்பட்டது. இதனையடுத்து ஆஷ் தேஷ் என்ற புதிய கப்பல் சில மாதங்களுக்கு முன்பு கடற்படையில் சேர்க்கப்பட்ட நிலையில், அதிநவீன தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய கப்பலான ஐ.சி.ஜி.எஸ். அபிராஜ் எனும் புதிய கப்பல் தூத்துக்குடி கடலோரக் காவல்படையில் சேர்க்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி துறைமுகத்தில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இந்திய கடற்படை தென் பிராந்திய தலைவர் திரு. எஸ்.பி.எஸ். சீமா முறைப்படி புதிய கப்பலை ஒப்படைத்தார். முன்னதாக கடலோரக் காவல்படையினரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில், கடலோரக் காவல்படை ஐ.ஜி. திரு. எஸ்.பி. ஷர்மா உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர். புதிதாக இணைக்கப்பட்டுள்ள ரோந்து கப்பலில், ஹெலிகாப்டர் இறங்கும் தளம், அதிநவீன தொலைநோக்கு கருவிகள், ரோந்து படகுகள், இயந்திர துப்பாக்கிகள் உள்ளிட்டவை இணைக்கப்பட்டுள்ளன.