தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 100 இளைஞர்களுக்கு, 8,500 ரூபாய் உதவித்தொகையுடன் ஓட்டுனர் பயிற்சி வழங்கப்பட்டது
Jul 22 2014 3:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழக அரசின் புதுவாழ்வு திட்டத்தின்கீழ், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 100 இளைஞர்களுக்கு, 8,500 ரூபாய் உதவித்தொகையுடன் ஓட்டுனர் பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சி முடித்த இளைஞர்களுக்கு ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்பட்டன.
தமிழகத்தில் பல்வேறு தரப்பு மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன் அடிப்படையில், அரசின் புது வாழ்வு திட்டத்தின் கீழ், தூத்துக்குடி மாவட்டத்தில் 100 இளைஞர்களுக்கு 8,500 ரூபாய் உதவித்தொகையுடன் கனரக மற்றும் இலகு ரக வாகனங்களுக்கான ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியை முடித்த இளைஞர்களுக்கு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் ஓட்டுனர் உரிமங்களை வழங்கினார். ஓட்டுனர் பயிற்சி முடித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதற்கான நடவடிக்கைகளையும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.