சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் 299-வது பிறந்த நாள் : தூத்துக்குடியில் உள்ள திருவுருவச் சிலைக்கு பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை
Sep 1 2014 1:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் 299-வது பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சங்கரன்கோவில் அருகே உள்ள நெல்கட்டும்சேவலைச் சேர்ந்த பாளையக்காரரான பூலித்தேவன், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக 1751-ஆம் ஆண்டு வீரமுழக்கமிட்டார். சிப்பாய் கலகத்திற்கு முன்னோடியான அவரது 299-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, தூத்துக்குடியில் உள்ள சிவனடி சாஸ்தா கோவிலில் அமைந்துள்ள அவரது சிலைக்கு ஏராளமான பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.