நிலநடுக்கம் ஏற்பட்டால், முன்னதாகவே அறிவிக்கும் நவீன கருவி - தூத்துக்குடி மாணவர் கண்டுபிடிப்பு
Aug 14 2014 12:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடியில், பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களை முன் கூட்டியே அறிவிக்கும் சென்சார் கருவி ஒன்றை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், எலக்டிரானிக்ஸ் இறுதியாண்டு படித்து வரும் சவுந்திரபாண்டியன் என்ற மாணவர் வடிவமைத்துள்ள கருவி, நிலநடுக்கம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களை முன் கூட்டியே அறிந்து ஒலி எழுப்பி எச்சரிக்கிறது. பூமிக்கு அடியில் சுமார் 500 அடியில் இந்த கருவியை பொருத்தினால், நிலநடுக்கத்துக்கான அறிகுறிகள் தெரிந்த உடனே இந்த கருவி, ஒலி எழுப்பி எச்சரிக்கை செய்கிறது. நிலநடுக்கத்தின் அளவினை பொறுத்து மின்சாரத்தினை உடனடியாக துண்டிப்பது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் வகையில் இக்கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டுபிடித்த மாணவரை அனைத்து தரப்பினரும் பாராட்டினர்.