தூத்துக்குடி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பள்ளி மாணவன் உட்பட 2 பேர் பலி

Aug 27 2014 11:36AM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பள்ளி மாணவன் உட்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தூத்துக்குடி பெரியநாயகிபுரத்தைச் சேர்ந்த 9-ம் வகுப்பு பள்ளி மாணவன் மகாராஜன், தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில், புதுக்கோட்டை சென்றுவிட்டு, வீடு திரும்பிக்கொண்டிருந்தார். டோல்கேட் அருகே அவர்கள் வந்த வாகனம், திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் மகாராஜன் உட்பட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதனிடையே, நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகேயுள்ள கஸ்தூரிப்பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் வீட்டில் சமையல் எரிவாயு கசிந்ததை அடுத்து, அதனை சரி செய்யும் முயற்சியில் அதே பகுதியைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் ஈடுபட்டார். அப்போது திடீரென தீப்பிடித்து, சிலிண்டர் வெடித்தது. அப்போது, வீட்டில் இருந்த பழனிச்சாமியின் 3 மகன்களும் காயமடைந்தனர். அவர்களை மீட்க முயன்றபோது பழனிச்சாமி உடலிலும் தீப்பற்றியது. தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புப்படையினர், 4 பேரையும் மீட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்து குறித்து எருமப்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00