திருச்சி சிறைக்காப்பாளரைத் தாக்கிய வழக்கு: தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என். நேரு அடுத்த மாதம் 11-ம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவு
Aug 27 2014 4:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி சிறைக்காப்பாளரைத் தாக்கிய வழக்கு தொடர்பாக தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என். நேரு அடுத்த மாதம் 11-ம் தேதி நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி மத்திய சிறை காப்பாளர் வீரமணி மீது கடந்த 2012-ம் ஆண்டு தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, செல்வராஜ் மற்றும் தி.மு.க. பிரமுகர்கள் கொலை வெறித் தாக்குதல் நடத்தினர். இதுகுறித்த வழக்கு திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணையின்போது இன்று ஆஜராகாத நேரு, அடுத்த மாதம் 11-ம் தேதி கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என நீதிபதி திரு.ராஜாராம் உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணையில் நேரு தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் வருவது குறிப்பிடத்தக்கது.