திருச்சியில் 2 வேன்களுக்கு மேல், இரு கால்களையும் வைத்து 5 நிமிடம் 22 வினாடிகள் வரை, ஆடாமல், அசையாமல் இருந்து கராத்தே ஆசிரியர் சாதனை
Jun 23 2014 2:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியைச் சேர்ந்த கராத்தே ஆசிரியர் ஒருவர் 2 வேன்களுக்கு மேல், இரு கால்களையும் வைத்து 5 நிமிடம் 22 வினாடிகள் வரை, ஆடாமல், அசையாமல் இருந்து புதிய கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.
திருச்சி மலைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கராத்தே ஆசிரியரான டிராகன் ஜெட்லி இதற்கு முன் 50 முறை தேசிய சாதனைகள் நிகழ்த்தி சான்றிதழ்கள் பெற்றுள்ளார். இதனைத்தொடர்ந்து, திருச்சி அண்ணா சிலை அருகே பொதுமக்கள் முன்னிலையில், 2 வேன்களுக்கு மேல் ஏறி, இரு கால்களையும் நேராக அகற்றிவைத்து, 5 நிமிடம் 22 வினாடிகள் நிலைகுலையாமல் இருந்து புதிய சாதனை முயற்சியில் ஈடுபட்டார். இதற்கு முன்பாக இத்தாலியைச் சேர்ந்த ஜெகப்போ என்பவர் 2 கார்கள் மேல் 3 நிமிடம் 48 வினாடிகள் நின்று நிகழ்த்திய சாதனையை ஜெட்லி முறியடித்துள்ளார். காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நிகழ்த்தப்பட்ட இச்சாதனை, சாதனைக் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.