திருச்சி தொகுதியில் வாக்களிக்க வந்த மக்களை தே.மு.தி.க. வேட்பாளர் விரட்டி அடித்து அராஜகத்தில் ஈடுபட்டதாக தேர்தல் ஆணையத்திடம் புகார்
Apr 24 2014 2:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி தொகுதியில் வாக்களிக்க வந்த மக்களை தே.மு.தி.க. வேட்பாளர் விரட்டி அடித்து அராஜகத்தில் ஈடுபட்டதாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது.
திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஸ்ரீரங்கம் கீழவாசல் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் இன்று நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் அமைதியாக வாக்களித்து வந்தனர். அப்போது, அங்கு வந்த தே.மு.தி.க. வேட்பாளர் திரு.விஜயகுமார், தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அ.இ.அ.தி.மு.க.வினரை மிரட்டியதோடு, காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், பொதுமக்களை முற்றுகையிட்ட தே.மு.தி.க.வினர் அராஜகத்தில் ஈடுபட்டதாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது.