கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் பட்டுசேலைகளுக்கு 45 சதவீதம் வரை தள்ளுபடி - மதுரையில் விற்பனை கண்காட்சி தொடக்கம்
Jul 29 2014 4:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரையில் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் 45 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பல்வேறு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் ஆடி சிறப்பு தள்ளுபடி விற்பனை கண்காட்சி மதுரையில் இன்று தொடங்கியுள்ளது. 15 நாட்கள் வரை நடைபெறும் கண்காட்சியை அமைச்சர்கள் திரு.செல்லூர் கே.ராஜூ, திருமதி. எஸ்.கோகுல இந்திரா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் திருபுவனம், காஞ்சிபுரம், கும்பகோணம், கடலூர், சேலம் உள்ளிட்ட பல பகுதிகளில் உற்பத்தியாகும் பட்டு சேலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ள பட்டு ரகங்களுக்கு 10 முதல் 45 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.