திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் தேரில் ஏற்பட்டுள்ள பழுதை நீக்கும் பணி தொடங்கியது
Sep 23 2014 2:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் தேரில் ஏற்பட்டுள்ள பழுதை நீக்கும் பணி மஹாளய அமாவாசையான இன்று தொடங்கியது. இதில் பல்வேறு தச்சுப்பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
250 ஆண்டுகள் பழமைவாய்ந்த திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் தேரின் உச்சியில் உள்ள கொடை பண்டிகை சேதமடைந்துள்ளதால் அதனை சீரமைக்க இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 63 அடி உயரமும், 24 அடி அகலமும் கொண்ட இந்த தேரின் கொடை பண்டிகை சீரமைக்கும் பணி 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மஹாளய அமாவாசையான இன்று தொடங்கியுள்ளது. வரும் நவம்பர் மாதம் 26-ம் தேதி தொடங்கவிருக்கும் திருக்கார்த்திகை விழாவையொட்டி, தேர் சீரமைப்பு பணி விரைவாக நடைபெற்று வருகிறது.