தேர்தல் விதிமுறையை மீறிய டி.ஆர்.பாலு மற்றும் அவரது உறவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் புகார்
Apr 23 2014 4:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேர்தல் விதிமுறையை மீறி, தஞ்சை மக்களவைத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பாலு மீதும், அவருக்கு வாக்களிக்கக்கோரி, நாளிதழில் விளம்பரம் கொடுத்துள்ள அவரது உறவினர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்யப்பட்டுள்ளது.
டி.ஆர். பாலுவுக்கு வாக்களிக்கக்கோரி, தஞ்சைப் பகுதி நாளிதழ் ஒன்றில் அவரது உறவினர் ஒருவர் விளம்பரம் செய்துள்ளார். தேர்தல் விதிமுறையை மீறி, அத்தொகுதியின் பிற வேட்பாளர்கள் மீது அவதூறு பரப்புவதாகவும் இந்த விளம்பரம் உள்ளது எனக் குறிப்பிட்டு, டி.ஆர். பாலு மற்றும் அவரது உறவினர் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, மாவட்ட தேர்தல் அலுவலரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.