அ.இ.அ.தி.மு.க. அரசின் 3 ஆண்டு கால சாதனைகளை விளக்கும் வகையில் மூக்கில் கயிறு கட்டி 5 ஆட்டோக்களை இழுத்து கழக தொண்டர் சாதனை
Jul 28 2014 12:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான, அ.இ.அ.தி.மு.க. அரசின் 3 ஆண்டு கால சாதனைகளை விளக்கும் வகையில், மூக்கில் கயிறு கட்டி, 5 ஆட்டோக்களை இழுத்து அ.இ.அ.தி.மு.க. தொண்டர் சாதனை படைத்துள்ளார்.
முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. அரசு, தமிழகத்தில் பல்வேறு விதமான நலத்திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறது. அ.இ.அ.தி.மு.க.வின் இந்த சாதனைகளை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில், ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சேர்ந்த அ.இ.அ.தி.மு.க. தொண்டர் அனல் அண்ணாதுரை என்பவர், அ.இ.அ.தி.மு.க. கொடிகளும், சாதனை விளக்க சுவரொட்டிகளும் ஒட்டப்பட்ட 5 ஆட்டோக்களை தன்னுடைய மூக்கில் கயிறுகட்டி இழுத்து சாதனை புரிந்துள்ளார். முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த சாதனை நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர். அமைச்சர் டாக்டர். எஸ். சுந்தரராஜ், இந்த சாதனை நிகழ்ச்சியை துவக்கி வைத்து அ.இ.அ.தி.மு.க. தொண்டருக்கு பாராட்டு தெரிவித்தார்.