ராமநாதபுரத்தில் இருசக்கர வாகனம் மீது, கார் மோதிய விபத்தில் தம்பதி பலி
Aug 27 2014 4:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரத்தில், இருசக்கர வாகனம் மீது, கார் மோதிய விபத்தில், கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தை அடுத்த நாரல் கிராமத்தை சேர்ந்த நாகராஜ், தனது மனைவியுடன், மகள் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக இருசக்கர வாகனத்தில், சென்றுகொண்டிருந்தார். அப்போது, திருச்சியிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், கணவன், மனைவி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து தேவிபட்டிணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.