புதுச்சேரியில் பாரதிய ஜனதா, பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்களிடையே நீடிக்கும் மோதல் - பாரதிய ஜனதா கொடி மற்றும் சின்னத்தை மற்ற கட்சிகள் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என புதுச்சேரி மாநில நிர்வாகிகள், தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு
Apr 18 2014 12:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் இணைந்தும், புதுச்சேரியில் தனித்தனியே போட்டியிடும் பாரதிய ஜனதா மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்களிடையிலான மோதல் பகிரங்கமாக வெடித்துள்ளது.
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சி, புதுச்சேரியில் தனித்து போட்டியிடுகிறது. இவ்விரு கட்சி வேட்பாளர்களிடையேயான மோதல், தற்போது பகிரங்கமாக வெடித்துள்ளது. பிரச்சாரத்தின்போது பாட்டாளி மக்கள் கட்சியினர், பாரதிய ஜனதாவின் கொடியையோ, சின்னத்தையோ பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என அம்மாநில பா.ஜ.க. நிர்வாகிகள், தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்துள்ளனர். இதன் காரணமாக, இரு கட்சியினரும் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.