தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது
Apr 22 2014 11:00AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மக்களவை தேர்தலுக்கான 6-வது கட்ட வாக்குப்பதிவு நாளை மறுதினம் நடைபெற உள்ளது. தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது.
16-வது மக்களவை தேர்தலுக்கான 6-வது கட்ட தேர்தல் நாளை மறுதினம் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40-தொகுதிகள் உட்பட, 12 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இத்தொகுதிகளில் நடைபெற்று வரும் அனல் பறக்கும் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. வாக்குப்பதிவையொட்டி மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள், அழியாத மை உள்ளிட்டவை வாக்குசாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. வாக்குபதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்களை பொருத்தும் பணிகளில் தேர்தல் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பிற்காக காவல் துறையை சேர்ந்த பல்வேறு கம்பெனிகள் அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இதனையடுத்து, 7-ம் கட்ட வாக்குப்பதிவு வரும் 30-ம் தேதியும், எட்டாவது கட்ட தேர்தல் வரும் 7-ம் தேதியும், இறுதி கட்ட தேர்தல் 12-ம் தேதியும் நடைபெறவுள்ளது. வரும் 16-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு உடனுக்குடன் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.