உதகையில் 25 டன் லாரியை தலைமுடியால் கட்டி இழுத்து இளைஞர் சாதனை
Aug 16 2014 3:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உதகையில், கின்னஸ் சாதனை முயற்சியாக 25 டன் லாரியை இளைஞர் ஒருவர் தனது தலைமுடியால் கட்டி இழுத்தார். இதனைக் கண்டு வியந்த அப்பகுதி மக்கள், அந்த இளைஞரை ஊக்கப்படுத்தினர்.
உதகை அருகே உள்ள மஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவர் லூயிஸ். கூலித் தொழிலாளியான இவர், ஆண்டுதோறும் சுதந்திர தினத்தின் மகத்துவத்தை உணர்த்தும் வகையில், பல்வேறு சாதனைகளுக்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், 68-வது சுதந்திர தினத்தையொட்டி, சுமார் 25 டன் எடை கொண்ட மணல் லாரியை தன் நீளமான தலைமுடியைக் கொண்டு இழுத்துச் சென்று கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். கின்னஸ் சாதனைக்காக இளைஞர் 15 அடி வரை லாரியை இழுத்துச் சென்றது அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியது. அந்த இளைஞருக்கு பாராட்டு தெரிவித்த மக்கள் கின்னஸ் சாதனைக்காக வாழ்த்தினர்.