நீலகிரி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராஜா, தோல்வி பயம் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா - அ.இ.அ.தி.மு.க. வினர் கையும், களவுமாக பிடிக்க முற்பட்டபோது பின்வாசல் வழியாக தப்பியோட்டம்
Apr 24 2014 2:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீலகிரி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளரும், ஸ்பெக்ட்ரம் ஊழல் புகாரில் சிக்கிய முன்னாள் அமைச்சருமான ஆ.ராசா, தோல்வி பயம் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் வழங்க வந்தபோது, கையும் களவுமாக பிடிபட்டார். அவரது காரை அ.இ.அ.தி.மு.க. தொண்டர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அவிநாசி ஒன்றியத்திற்குட்பட்ட தேவராயன்பாளையம் என்ற இடத்தில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் தி.மு.க.வினருடன் வந்த ஆ.ராசா வாக்காளர்களுக்கு, பணப்பட்டுவாடா செய்தார். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த அ.இ.அ.தி.மு.க.வினரை கண்டதும், அங்குள்ள ஒரு வீட்டுக்குள் ஆ.ராசா பதுங்கிக்கொண்டார். இதையடுத்து, வீட்டை முற்றுகையிட்ட அ.இ.அ.தி.மு.க. தொண்டர்களின் பிடியிலிருந்து தப்பிப்பதற்காக அவர் வீட்டின் பின்வாசல் வழியாக ஓட்டம் பிடித்தார். பின்னர் காரில் ஏறிச் சென்ற ஆ. ராசாவை அ.இ.அ.தி.மு.க. தொண்டர்கள் வழி மறித்தனர். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய வந்த ஆ. ராசாவின் முறைகேடு குறித்து, தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.