நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நடைபெற்ற இளைஞர் விவாத அரங்கம், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

Jul 22 2014 3:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழ் இலக்கியங்களில் இளம்தலைமுறையினரிடையே ஆர்வத்தை தூண்டும் வகையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நடைபெற்ற இளைஞர் விவாத அரங்கம், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

ராசிபுரம் கம்பன் கழகம் சார்பில், 50-வது ஆண்டு விழா ராசிபுரத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. லலிதாலயா இசைப்பள்ளி மாணவ, மாணவியரின் இசை வணக்கத்துடன் தொடங்கிய இந்த விழாவில், சீதைக்கு நேர்ந்த துன்பங்களுக்கு அவளே காரணம் என்ற தலைப்பில் வழக்காடு மன்றம் நடைபெற்றது. தொடர்ந்து, கம்பராமாயணத்தின் புகழை பரப்பும் வகையில் பல நூல்களைப் படைத்தும், ஆய்வு கட்டுரைகள் வெளியிட்டும் அரை நூற்றாண்டுக்கு மேலாக தமிழுக்கு தொண்டு ஆற்றி வரும் சிந்தாமணி செம்மல் புலவர் மு.ராமசாமியின் இலக்கிய பணியினை பாராட்டி, கௌரவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, தமிழ் இலக்கியங்களில் இளம்தலைமுறையினர் ஆர்வம் காட்டும் வகையில், இளைஞர் விவாத அரங்கமும், பாத்திரப் படைப்பில் கவிச்சக்கரவர்த்தி கம்பனை பாடாய் படுத்தியவர்கள் என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. இரண்டு நாள் நிகழ்ச்சிகளிலும், தமிழ் அறிஞர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். விழா நிறைவில், ராசிபுரம் கம்பன் கழக செயலாளர் முனைவர் பிரேம்குமார் நன்றி தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00