முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவையடுத்து நாமக்கல் நகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, பிறப்பு சான்றிதழ் சிறப்பு முகாமில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன

Sep 2 2014 12:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

மாணவர்களுக்கான பிறப்பு சான்றிதழ், அவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே வழங்க வேண்டும் என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து, நாமக்கலில் உள்ள நகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, பிறப்பு சான்றிதழ்கள் வழங்கும் சிறப்பு முகாம் நேற்று தொடங்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் திரு. வா. தட்சிணாமூர்த்தி, மாணவர்களுக்கு சான்றிதழை வழங்கினார். இந்த முகாமிற்கு தலைமை வகித்து பேசிய நகராட்சித் தலைவர் திரு. கரிகாலன், தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ - மாணவியர்களுக்கு, அந்தந்த பள்ளிகளிலேயே பிறப்பு சான்றிதழ்களை வழங்க வேண்டுமென முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்றும், அதன்படி, இந்த முகாம் 5 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்தார். இந்த சிறப்பு முகாமில் ஒரே நாளில் 130 மாணவ - மாணவியருக்கு பிறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00