முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கும் முட்டையுடன் கலவை சாதம் - சுவை, சத்துமிகுந்த உணவை உண்டு மகிழ்ந்த குழந்தைகள்
Sep 2 2014 11:44AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவையடுத்து, மாநிலம் முழுவதிலும் உள்ள அங்கான்வாடி மையங்களில் பயிலும் சிறுவர், சிறுமியர்களுக்கு, சுவையான பல்வகை சாதம் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது, பெற்றோர்களிடம் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அங்கன்வாடி குழந்தைகள் சத்துணவை உண்ணாமல் தவிர்க்கும்போது, அவர்கள் விரும்பும் வகையில், சத்துணவுடன் கலவை சாதமும் சேர்த்து வழங்கும் திட்டத்தை, கடந்த 2012-ம் ஆண்டு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இந்த உணவு வகையை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதை அறிந்து, இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து, நேற்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில், சிறுவர் சிறுமியர்களுக்கு சுவை மிகுந்த கலவை சத்துணவு வழங்கப்பட்டது. அதன் ஒருபகுதியாக, நாமக்கல் மாவட்டம் காவேட்டிப்பட்டி குழந்தைகள் மையத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர், பல்வகை சாதம் மற்றும் முட்டைகளை சிறுவர் - சிறுமியர்களுக்கு வழங்கினார். அதனை சிறுவர் - சிறுமியர்கள் மகிழ்ச்சியுடன் உண்டு மகிழ்ந்தனர்.
திருச்சி மாவட்டம் மணிகண்டா ஒன்றியத்தில் உள்ள 93 அங்கன்வாடி மையங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 410 மாணவ - மாணவியர் மற்றும் மாநகராட்சிக்குட்பட்ட உறையூரில் உள்ள 119 அங்கன்வாடி மையங்களில் பயிலும் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட 2 ஆயிரத்து 420 மாணவ - மாணவிகளுக்கும், கலவை சாதம் வழங்கப்பட்டது. அதனை குழந்தைகள் ஆர்வமுடன் அருந்தினர்.
இதேபோல், வேலூர் மாவட்டம் கஸ்பா பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில், குழந்தைகளுக்கு தக்காளி சாதம் மற்றும் முட்டையை சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆர். சீனிவாசன் வழங்கினார்.