நாகப்பட்டினம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் செல்லும் இடமெல்லாம் தொடர்ந்து வலுக்கிறது எதிர்ப்பு : தொகுதி பக்கமே வராமல் வாக்கு கேட்க மட்டும் வருவதா? எனக் கூறி விரட்டியடித்த பொதுமக்கள்
Apr 18 2014 11:37AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர், வாக்கு கேட்க சென்றபோது, பொதுமக்கள் அவரது வாகனத்தை முற்றுகையிட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
நாகப்பட்டினம் தொகுதியில் தி.மு.க. சார்பில் இம்முறையும் ஏ.கே.எஸ். விஜயன் போட்டியிடுகிறார். அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து பல வருடங்களாக இருந்து வரும்போதிலும், அவர் மக்களை சந்திப்பதில்லை என்ற குற்றசாட்டு இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று முத்துப்பேட்டை பகுதியில் பிரச்சாரம் செய்ய சென்றபோது, கிராம மக்கள் அவரது வாகனத்தை முற்றுகையிட்டதோடு, திரும்பிச் செல்லுமாறும் கோஷமிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஏ.கே.எஸ். விஜயனும், அவருடன் வந்த தி.மு.க.வினரும், பொதுமக்களுடன் தகராறில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.