மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு எதிரான பெங்களூரு நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, அ.இ.அ.தி.மு.க. தோழமைக் கட்சித் தலைவர்கள் சென்னையில் உண்ணாவிரதம்
Oct 1 2014 3:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு எதிரான பெங்களூரு நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, அ.இ.அ.தி.மு.க. தோழமைக் கட்சித் தலைவர்கள், சென்னையில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். செல்வி ஜெயலலிதா, பொய்வழக்கிலிருந்து விடுபட்டு, மீண்டும் முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பேற்பது உறுதி என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மக்களின் முதல்வரும், அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான செல்வி ஜெ ஜெயலலிதாவுக்கு எதிராக பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, அ.இ.அ.தி.மு.க. தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் சென்னையில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். மூவேந்தர் முன்னேற்றக்கழகத் தலைவர் திரு. ஸ்ரீதர் வாண்டையார், கொங்கு இளைஞர் பேரவை தலைவர் திரு. உ. தனியரசு, இந்திய யூனியன் காயிதேமில்லத் லீக் தலைவர் திரு. தாவூத் மியாகான், இந்திய தேசிய லீக் தலைவர் திரு. பஷீர் அஹமது உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் பலரும் இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே, புரட்சி பாரதம் கட்சி சார்பில், ஏராளமானோர் பங்கேற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.