மக்களின் முதல்வர் ஜெயலலிதா, தடைகளை தகர்த்தெறிந்து விரைவில் விடுதலையாக வேண்டி, ஆயிரக்கணக்கான மீனவர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தம் : மக்களின் முதல்வர் விடுதலையாகும் வரை போராட்டம் தொடரும் எனவும் உறுதி
Oct 1 2014 3:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதா, தடைகளை தகர்த்தெறிந்து விரைவில் விடுதலையாக வேண்டி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மக்களின் முதல்வர் செல்வி ஜெயலிதாவுக்கு எதிரான கர்நாடக மாநில சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கண்டித்து, நாகை மாவட்டத்தில் உள்ள 54 மீனவ கிராமங்களிலும் மீனவர்கள் இன்று 5-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடியில், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வாயில் கருப்புத் துணியைக் கட்டிக்கொண்டு உண்ணாவிரதம் மேற்கொண்டனர். மக்களின் முதல்வர் விடுதலையாகும் வரை வேலை நிறுத்தத்தைத் தொடருவோம் என அவர்கள் தெரிவித்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்கள் மற்றும் சங்குகுளி தொழிலாளர்கள் 3-வது நாளாக இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பெண்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் திரேசாபுரம் கடற்கரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, 30-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகில் நடுகடலுக்கு சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீன்பிடி படகுகளில் கருப்புக் கொடிகளை கட்டியபடி, இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.