கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் மேற்கு தொடர்ச்சிமலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆழியாறு அணை நிரம்பியதால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
Sep 1 2014 12:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வால்பாறை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, ஆழியாறு அணை நிரம்பியதால், கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் மேற்கு தொடர்ச்சிமலைப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறு அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில், ஆழியாறு அணை, தனது முழு கொள்ளளவான 120 அடியை இன்று அதிகாலை எட்டியது. இதனால், அணையின் மதகுகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதே அளவு நீர் வெளியேற்றப்படுவதால், ஆழியாறு கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.