தமிழகத்தில் 3 மாநகராட்சி மேயர் பதவி, 8 நகர்மன்ற தலைவர் பதவி உட்பட உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு வரும் 18-ம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிவித்த கழக வேட்பாளர்கள் அனைவரும் பிரச்சாரத்தை முழு வீச்சில் தொடங்கியுள்ளனர்.
கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திரு. கணபதி ராஜ்குமாரை ஆதரித்து, அமைச்சர் திரு. S.P. வேலுமணி, நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் திருமதி இ. புவனேஸ்வரியை ஆதரித்து, அமைச்சர் திரு. செந்தூர்பாண்டியன், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிடும் திருமதி ஏ.பி.ஆர். அந்தோணி கிரேஸி, அமைச்சர் திரு. S.P. சண்முகநாதன், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
சென்னை மாநகராட்சியின் 39-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் திரு. ஏ. டேவிட் ஞானசேகரனை ஆதரித்து, கழக அவைத் தலைவர் திரு. இ.மதுசூதனன், அமைச்சர்கள் திருமதி பா. வளர்மதி, திருமதி. எஸ். கோகுல இந்திரா, சென்னை மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
சென்னை மாநகராட்சியின் 166-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் திரு. எஸ்.எஸ்.கே. ராஜேந்திரனை ஆதரித்து, அமைச்சர் திரு. டி.கே.எம். சின்னையா, சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கழக நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
மதுரை மாநகராட்சியின் 4-வது வார்டு கழக வேட்பாளர் திரு. கே. சண்முகம் மற்றும் 85-வது வார்டு கழக வேட்பாளர் திருமதி யு.கே. லதாகுமார் ஆகியோரை ஆதரித்து, அமைச்சர் திரு. செல்லூர் கே. ராஜு, மேயர், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
திருச்சி மாநகராட்சி 15- வது வார்டில் போட்டியிடும் கழக வேட்பாளர் திருமதி. எம். ராஜலட்சுமி மற்றும் 32 -வது வார்டு போட்டியிடும் திரு. ஆர். சங்கரை ஆதரித்து, அரசு தலைமை கொறடா திரு. ஆர். மனோகரன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட 7-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் அ. வாசுகி அன்பழகனை ஆதரித்து, நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர் மற்றும் கழக நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 22-வது வார்டில் போட்டியிடும் கழக வேட்பாளர் திரு. கலைமகள் கோபால் என்கிற எம். கோபால்சாமி மற்றும் 45-வது வார்டு வேட்பாளர் திரு. எம். கண்ணன் ஆகியோரை ஆதரித்து, அமைச்சர் திரு. எம்.எஸ்.எம். ஆனந்தன், கழக நிர்வாகிகளுடன் வீடுவீடாகச் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட 60-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் திரு. T. பாலசுப்பிரமணியத்தை ஆதரித்து, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகர்மன்றத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் திரு. பி. அருளழகனை ஆதரித்து அமைச்சர் திரு. M.C. சம்பத், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் கழக வேட்பாளர் திரு. ஆர். ராஜசேகரனை ஆதரித்து, அமைச்சர்கள் திரு. என். சுப்பிரமணியன், டாக்டர் சி. விஜயபாஸ்கர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கழக நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் கழக வேட்பாளர் திருமதி எஸ். சந்தான லட்சுமியை ஆதரித்து, அமைச்சர் டாக்டர் எஸ். சுந்தர்ராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
கொடைக்கானல் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் கழக வேட்பாளர் திரு. எம்.ஸ்ரீதரை ஆதரித்து, கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
நாமக்கல், திருவண்ணாமலை, தஞ்சாவூர், விழுப்புரம், விருதுநகர், உள்ளிட்ட மாவட்ட ஊராட்சிகள் மற்றும் பல்வேறு ஊராட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கான தேர்தலில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.