மக்களின் முதல்வர் ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை, இன்றே விசாரிக்க அனுமதிக்க வேண்டும் : கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளரிடம் அ.இ.அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் மனு தாக்கல்
Oct 1 2014 3:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை, கர்நாடக உயர்நீதிமன்ற விடுமுறைக்கால நீதிபதி ரத்னகலா நிராகரித்ததைத் தொடர்ந்து, வேறு நீதிபதியை அமர்த்தியாவது, ஜாமீன் மனுவை இன்றே விசாரிக்கக்கோரி உயர்நீதிமன்ற பதிவாளரிடம் அ.இ.அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவும் நிராகரிக்கப்பட்டது.
கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை இன்று காலை விசாரிக்க வேண்டிய நீதிபதி ரத்னகலா, உரிய விசாரணை மேற்கொள்ளாததோடு, யாரும் எதிர்பாராத வகையில், மனுவை வழக்கமான அமர்வே விசாரிக்கும் என்று திடீரென அறிவித்தார். இதன் காரணமாக, தசரா விடுமுறைக்குப் பிறகு, வரும் 7-ம் தேதியன்றுதான் மனுவை விசாரணைக்கு ஏற்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, அ.இ.அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் உடனடியாக உயர்நீதிமன்ற பதிவாளரை சந்தித்து, வேறு நீதிபதியை அமர்த்தியாவது, ஜாமீன் மனுவை இன்றே விசாரிக்க வேண்டும் எனக் கோரி மனு தாக்கல் செய்தனர். ஆனால் இந்த மனுவும் நிராகரிக்கப்பட்டது.