கன்னியாகுமரி மாவட்டத்தில் சூரிய சக்தியில் இயங்கும் காரை உருவாக்கி தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை
Mar 28 2014 2:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள், சூரிய சக்தியில் இயங்கும் காரை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மாற்று சக்தியில் வாகனங்களை இயக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே தேரேகால் புதூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள், சுற்றுச்சூழலுக்கு மாசினை ஏற்படுத்தாத வகையில், சூரிய சக்தியின் மூலம் இயங்கும் காரினை உருவாக்கி உள்ளனர். சுமார் 4 மாத கடின உழைப்புக்கு பிறகு, அக்கல்லூரியைச் சேர்ந்த 4 மாணவர்கள் இந்தக் காரினை படைத்துள்ளனர். 4 கியர்களைக் கொண்ட கார், பயணிக்கும் பாதையில் இடையூறு இருந்தால் தானாக நின்றுவிடும். இந்தக் காரினை 2 லட்சம் ரூபாய் செலவில் சிறப்பாக தயாரிக்க முடியும் என மாணவர்கள் கூறுகின்றனர்.