காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணி துணைச் செயலாளர் நீக்கம்
Aug 27 2014 11:31AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணி துணைச் செயலாளர், அ.இ.அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக, கழகப் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், கழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணி துணைச் செயலாளர் திரு. C. உதயகுமார், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். கழகத் தொண்டர்கள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்றும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.