தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆயத்த ஆடை தயாரிக்கும் பணி ஈரோட்டில் விறுவிறுப்பு
Sep 20 2014 1:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆயத்த ஆடை தயாரிக்கும் பணி ஈரோட்டில் விறுவிறுப்படைந்துள்ளது. தங்குடையின்றி சீராக மின்விநியோகம் செய்யப்படுவதால், அதிக வருவாய் கிடைத்து வருவதாக தையல் தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
தீபங்களின் திருவிழா என புகழப்படும் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒருமாதமே உள்ள நிலையில், கண் கவரும் ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் பணி ஈரோட்டில் விறுவிறுப்படைந்துள்ளது. ஜவுளிச் சந்தை எனப் புகழப்படும் ஈரோட்டில் ஆயத்த ஆடை தயாரிப்பு பணியில் ஆயிரக்கணக்கான தையல் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இரவு-பகல் பாராமல் அதிநவீன வடிவங்களில், கண்கவரும் வண்ணங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற வகையில் உடைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஆர்வமுடன் ஈடுபட்டுள்ளனர். தங்குதடையின்றி தடையில்லாமல் மின்சாரம் கிடைத்து வருவதால், நாள்தோறும் தங்களுக்கு அதிக வருவாய் கிடைத்து வருவதாக கூலித் தையல் தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.