ஈரோட்டில் பொறியியல், மின்னணு, வேளாண் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில்நுட்பக் கண்காட்சி தொடங்கியது
Sep 19 2014 4:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெருந்துறை சாலையில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் சிறுதொழில் சங்கம் மற்றும் தேசிய சிறுதொழில் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சியை, அமைச்சர் திரு. தோப்பு N.D.வெங்கடாசலம் திறந்துவைத்தார். இதில், பொறியியல், ஜவுளி, கட்டடப்பொருட்கள், பிளாஸ்டிக், மின்னணுப் பொருட்கள், மூலிகை மற்றும் வேளாண் பொருட்கள் என 130 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கல்லூரி மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் மருத்துவமுகாம், உணவுத் திருவிழா என பல்வேறு பிரிவுகள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இந்நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. செல்வகுமார சின்னையன், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. ஆர்.என்.கிட்டுசாமி, திரு. கே.வி.ராமலிங்கம், மேயர் திருமதி. மல்லிகா பரமசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.