தமிழக அரசின் மாற்றுப்பயிர் திட்டத்தின் மூலம் ஈரோடு விவசாயிகள் பீன்ஸ் சாகுபடி செய்து அதிக லாபம் ஈட்டி வருகின்றனர்
Sep 23 2014 1:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரோடு மாவட்ட மலைப்பகுதிகளில் தமிழக அரசின் மாற்றுப்பயிர் திட்டத்தின் மூலம் விவசாயிகள் பீன்ஸ் சாகுபடி செய்து அதிக லாபம் ஈட்டி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம், ஆசனூர் மலைப்பகுதியில் உள்ள கேர்மாளம், கோட்டாடை, அரேபாளையம் உள்ளிட்ட இடங்களில், தமிழக அரசின் மாற்றுப்பயிர் திட்டத்தின் மூலம் விவசாயிகள் குட்டை பீன்ஸ் ரகங்களை அதிக அளவில் பயிரிட்டுள்ளனர். 3 மாதப் பயிரான பீன்ஸுக்கு, தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை மூலம் தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்படுவதால், ஏக்கருக்கு வாரம் ஒன்றுக்கு ஆயிரம் கிலோ வரை மகசூல் கிடைக்கிறது. மேலும் அப்பகுதி தொழிலாளர்களுக்கும் வேலை கிடைத்து வருகிறது. ஈரோடு, சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம் சந்தைகளில், பீன்ஸுக்கு நல்ல விலை கிடைப்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ள விவசாயிகள், அதிக வருமானம் ஈட்டி வருகின்றனர். மாற்றுத் திட்டத்தின் மூலம் தங்களுக்கு அதிக வருவாய் கிடைக்க வழி செய்துள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் ஊக்கத்தால், மாற்றுப்பயிர் திட்டத்தின் மூலம், இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது.