கடலூரில் நடைபெற்ற கண்தான விழிப்புணர்வு பேரணியில் செவிலியர் மாணவிகள் பங்கேற்பு
Aug 27 2014 4:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
29-வது தேசிய கண்தான விழாவையொட்டி, கடலூரில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் செவிலியர் மாணவிகள் பங்கேற்றனர்.
தானத்தில் சிறந்ததாக கருதப்படும் கண்தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது, 29-வது தேசிய கண்தான இருவார விழா கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கடலூர் நடைபெற்ற பேரணியில் கண்தானம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி செவிலியர் மாணவிகள் ஊர்வலமாகச் சென்றனர். வழிநெடுகிலும், பொதுமக்களுக்கு துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டன. பேரணியை மாவட்ட ஆட்சியர் திரு.சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார்.