தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளையும் அ.இ.அ.தி.மு.க. வெற்றிபெற்ற தொகுதிகளாகவே கருதுவதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா தகவல்
Aug 1 2014 3:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளையும் அ.இ.அ.தி.மு.க. வெற்றிபெற்ற தொகுதிகளாகவே கருதுவதாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின்போது குறுக்கிட்டுப் பேசிய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளையுமே அ.இ.அ.தி.மு.க.வின் தொகுதிகளாகவே தாங்கள் கருதுவதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து சட்டமன்ற தேர்தல் தொடர்பாக தே.மு.தி.க. உறுப்பினரின் சர்ச்சைக்குரிய பேச்rசுக்கு மறுப்பு தெரிவித்து அமைச்சர்கள் கருத்து தெரிவித்தனர்.
அதன் பிறகு பேசிய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் 217-ல் அ.இ.அ.தி.மு.க. தனித்தே வெற்றிபெற்றதை பெருமையுடன் குறிப்பிட்டார்.