37 கோடி ரூபாய் செலவில் 300 ''அம்மா அமுதம் பல்பொருள் அங்காடிகள்" தமிழகமெங்கும் தொடங்கப்படும்; 35 கோடி ரூபாய் மதிப்பில் 100 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் கட்டப்படும் : முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவிப்பு
Aug 1 2014 4:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையினை மேலும் மேம்படுத்தும் விதமாக, 37 கோடியே 17 லட்சம் ரூபாய் செலவில் 300 ''அம்மா அமுதம் பல்பொருள் அங்காடிகள்" தமிழகமெங்கும் தொடங்கப்படும் என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். 35 கோடி ரூபாய் மதிப்பில் 100 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் கட்டப்படும் என்றும் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று பேரவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வாசித்தார். அப்போது பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வெளியிட்டார். மேலும், திருவாரூர் மாவட்டத்தில் 140 மெட்ரிக் டன் திறன் கொண்ட தவிட்டு எண்ணெய் ஆலை 16 கோடி ரூபாய் மதிப்பில் நிறுவப்படும் - 84,500 மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட 39 புதிய கிடங்குகள் 112 கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டார்.