தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு - சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி வாக்குச்சாவடியில் வாக்களித்தார் முதலமைச்சர் ஜெயலலிதா
Apr 24 2014 5:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மக்களவைத் தேர்தலில் மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில், முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா இன்று தனது வாக்கினை பதிவு செய்தார்.
16-வது மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா மத்திய சென்னை தொகுதியில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில், தமது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த முதலமைச்சர், முடிவுகள் வெளியான பின்னர் தமது கருத்தை தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.
இதனைத்தொடர்ந்து, பைராகி மடம் வெங்கடேச பெருமாள் திருக்கோயில், புரசைவாக்கம் சீனிவாச பெருமாள் திருக்கோயில், நுங்கம்பாக்கம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில், சிந்தாதிரிபேட்டை ஆதிகேசவபெருமாள் திருக்கோயில், முத்தையால்பேட்டை ஸ்ரீவேணுகோபாலகிருஷ்ணசாமி திருக்கோயில், மாம்பலம் கோதண்டராம சுவாமி திருக்கோயில், எழும்பூர் ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோயில் ஆகியவற்றின் சார்பில் பூரண கும்ப மரியாதையும், ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோயில் பிரசாதமும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டது.