குஜராத் மாநிலத்தில், ஒரு கோடி லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் : வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த பாட்டில்களை கைப்பற்றி, தேர்தல் ஆணைய அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
Apr 19 2014 10:48AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுபானம் தடை செய்யப்பட்டுள்ள குஜராத் மாநிலத்தில், நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தேர்தல் ஆணைய அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கைகளில் இதுவரை ஒருகோடி லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் மதுபானம் தடை செய்யப்பட்டுள்ளதாக பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஆனால், அம்மாநிலத்தில் கள்ளச்சாராய வணிகம் நடைபெற்று வருவதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகின. தற்போது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி, குஜராத் மாநிலத்தில் தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள், வாக்காளர்களுக்கு கொடுக்க எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களையும், மதுபான வகைகளையும் தீவிரமாக கண்காணித்து பறிமுதல் செய்து வருகின்றனர். குஜராத் மாநிலம் முழுவதும், இதுவரை பலகோடி ரூபாய் மதிப்புள்ள, ஒரு கோடி லிட்டர் கள்ளச்சாராய பாட்டில்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இத்தகவலை தேர்தல் செலவுகளை கண்காணித்து வரும் இயக்குநர் திரு. பி.கே.தாஷ் தெரிவித்துள்ளார்.