முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி, அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு - திருப்பூர், கரூர் மாவட்டங்களில், 47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்

Sep 22 2014 3:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்படி, திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் இருந்து, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு, இன்றுமுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம், இம்மாவட்டங்களில், 47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள அமராவதி அணையிலிருந்து, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி வேளாண் பெருமக்கள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்று, திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள அமராவதி பாசன அமைப்பின்கீழ் உள்ள புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு இன்று முதல் தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆணையிட்டார்.

தங்களின் வேண்டுகோளினை ஏற்று அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட உத்தரவிட்ட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, விவசாயிகள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.

அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதன் மூலம், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில், 47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00